முழுமதி அறக்கட்டளை வழங்கும் கல்வி மேம்பாட்டுத்திட்டம்-1
புதுகரிக்காத்தூர் அரசுப்பள்ளி நூலகம் திறப்புவிழா அழைப்பிதழ்
முழுமதி அறக்கட்டளையானது போளூர் வட்டத்தில் அமைந்துள்ள புதுக்கரிக்காத்தூர் அரசுப்பள்ளியை முன்மாதிரி பள்ளியாக மாற்றுவதற்காக தேர்ந்தெடுத்துள்ளதை நாம் அறிந்ததே. இப்பள்ளியில் நூலகம் அமைப்பது பற்றி ஏற்கெனவே ஆலோசனைகள் கேட்டு பதிவிட்டிருந்தோம். ஏறத்தாழ 300 புத்தகங்களை கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்துடன் துளிர் (அறிவியல் இதழ்), பூவுலகு மின்மினி (சுற்றுச்சூழல் இதழ்) போன்ற மாத இதழ்களையும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
நூலகத்திற்கு தேவையான புத்தகப்பட்டியல் தயாரிக்க நண்பர்கள் பல வகைகளில் உதவி புரிந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் இப்பதிவின் மூலம் முழுமதியின் சார்பாக எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நூலகமானது, குழந்தைகள் நாளான நவம்பர் 14 ஆம் திகதி திறப்பு விழா காணவிருக்கிறது. இத்திறப்பு விழாவில் நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து முழுமதியின் செயல்பாட்டிற்கு தங்கள் மேலான ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திறப்பு விழா நாள்: 14 - 11 – 2014
இடம்: புதுகரிக்காத்தூர் அரசுப்பள்ளி, (போளூரிலிருந்து வேலூர் செல்லும் சாலை, முருகப்பாடி வழி)
நேரம் : மதியம் 2 மணி
இடம்: புதுகரிக்காத்தூர் அரசுப்பள்ளி, (போளூரிலிருந்து வேலூர் செல்லும் சாலை, முருகப்பாடி வழி)
நேரம் : மதியம் 2 மணி
தொடர்புக்கு: திரு. பரசுராமன் : + 91-9487349488
(தலைமை ஆசிரியர்)
திரு. ஜெகநாதன் : + 91-9894016112
(ஆசிரியர்)
(தலைமை ஆசிரியர்)
திரு. ஜெகநாதன் : + 91-9894016112
(ஆசிரியர்)
முழுமதி முகநூல் பக்கம்:https://www.facebook.com/groups/227137273964819/?ref=ts&fref=ts
முழுமதி தன்னார்வலராக இணைய:
https://docs.google.com/…/1YYco2QgvxpIadUvGvShh3C8…/viewform
https://docs.google.com/…/1YYco2QgvxpIadUvGvShh3C8…/viewform












